HybridAnalyzer Tamil: History

Hot

Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Tuesday, 24 September 2019

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது படையெடுக்க முக்கிய காரணமாக இருந்தது இந்த கருப்பன் தான்!

September 24, 2019 0

இந்தக் கருப்பனுக்கு  வெள்ளையர் அடிமையான கதை கேட்பதற்கு வியப்பாக, வேடிக்கையாக இருந்தாலும் உலக வரலாற்றில் இதுதான் நடந்த உண்மை.


நானறிந்த வரை வெறும் 4.5 மி.மீ அளவில் சிறு உருண்டையாகத் தோற்றம் காட்டி காய்ந்து கறுத்த உருகொண்டு, கறுப்புத் தங்கம் என்ற புனைபெயரால் அழைக்கப்பட்டு, கைவிரலிடுக்கினில் கூட நசுங்கி பொடிபடக்கூடிய மிகச்சிறிய அளவிலான உருண்டைதான்.

 நம் நாடு ஆங்கிலேயர்களின் கீழ் அடிமையாகி பலநூறு ஆண்டுகள் துன்பங்கள் பலவற்றை அனுபவிக்க முழுமுதல் காரணமாக இருந்தது. அன்றைக்கு இச்சிறு உருண்டைதான் உலக வரலாற்றையே மாற்றி அமைத்தது என கூறினால் அது மிகையாகாது.


இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்டு பிறந்த இது,  வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே கேரளக் கடற்கரைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி இந்தியர்களின் வாணிகத்தில் பெரும்பங்காற்றி 'கருப்புத் தங்கம்'  என்ற சிறப்பு விருதுகளையும் அன்றைக்கே அடைந்தது. பண்டைக்காலத்தில் பணத்திற்கு மாற்றாக இதனை உபயோகப்படுத்தியதாகவும் வரலாறு கூறுகிறது.


இன்றைக்கு அரபு நாடுகளின் எண்ணெய் வளம் உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதைப்போல, அன்றைக்கு உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் வலிமையோடு, உலகச் சந்தையில் முன்னணியில் இருந்தது காரணமாகவே இதன் பிறப்பிடம் தேடி இந்தியா வந்தனர் அந்நிய நாட்டு வணிகர்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இவற்றின் தேவை மிக அதிகமாக இருந்ததாலும், இடைத்தரகர்கள் விலையை உயர்த்திக் கொண்டே இருந்ததாலும்,  இதன் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டே,  இந்தியாவுக்கு முதலில் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.
சிறப்பம்சமான , தனித்துவமான காரச்சுவை மிக்க இந்த சின்னஞ்சிறு மிளகு இல்லாவிடில் நம் நாட்டின் வரலாறே வேறு வகையில் மாறியிருக்கும்.


லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் இந்தியாவிலிருந்து நேரடி கொள்முதல் செய்யும் நோக்கில் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது.

Read More

Friday, 16 February 2018

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்

February 16, 2018 0
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.
பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.
சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,
"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.
எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.
அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக,
"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது,
'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக,
"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.
என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,
"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.
ஆனால்,
இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,
அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.
மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.
மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.
மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.
அது சவக்குழி வரை மட்டும்தான்..!
மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,
சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..


King Alexander last wishes in tamil
Read More