2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை சாஸ் பாட்டிலில் கடத்தி வந்த கொள்ளையர்கள், மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலிய போலீஸ்! - HybridAnalyzer Tamil

Hot

Friday 1 November 2019

2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை சாஸ் பாட்டிலில் கடத்தி வந்த கொள்ளையர்கள், மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலிய போலீஸ்!

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திற்கு, அமெரிக்காவிலிருந்து சந்தேகப்படும் படியான ஒரு சரக்கு பெட்டக வந்துள்ளது. அதனுடைய ஆவணங்களை சரிபார்த்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் அதில் ஏதோ குளறுபடி இருப்பதாக சந்தேகித்ததால் அதைக் கொண்டு வந்த நான்கு நபர்களை தனியாக அழைத்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.


சில்லி சாஸ் எனக்கு குறிப்பிடப்பட்டிருந்த அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் சில்லி சாஸ் பாட்டில்கள் தான் இருந்தது. இருந்தாலும் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக அதிலிருந்த சில பாட்டில்களை திறந்து சோதித்தபோது அதில் மெத்திலம் பெட்டமைன் என்கிற போதைப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது.

உடனே அந்த நால்வரையும் கைது செய்ததோடு ஒட்டுமொத்த பாட்டில்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். இதில் 400 கிலோ அளவுள்ள அதே ரக போதை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு 272 மில்லியன் டாலர்கள். அதாவது, நமது இந்திய மதிப்பில் கூறவேண்டுமானால் சுமார் 1930 கோடியை தாண்டும்.

400 கிலோ என்பது மிகப்பெரிய அளவு என்பதால் இந்த நான்கு நபர்கள் மட்டும் அல்லாமல் இவர்கள் பின்னால் பெரிய கூட்டமே இருக்கும் என ஆஸ்திரேலிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment