HybridAnalyzer Tamil: world fact

Hot

Showing posts with label world fact. Show all posts
Showing posts with label world fact. Show all posts

Monday 28 October 2019

25 வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைப் பருவ புத்தகத்தை அருங்காட்சியத்தில் கண்டுபிடித்த பெண்!

October 28, 2019 0
ஒருவர் சிறுமியாக இருந்தபோது தன் பெயரை எழுதிய புத்தகத்தை மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ அண்ட்ரோஸ் மற்றும் அவரது சகோதரி ஹெனா, இவர்கள் சிறுமிகளாக இருந்தபோது தி சீக்ரட் கார்டன் என்ற புத்தகத்தை வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அந்த புத்தகத்தில் ஹேனா என எழுதியுள்ளார்கள். பின்னர் அவர்கள் வளர்ந்து விட்டதால் அந்தப் புத்தகத்தை சில ஆண்டுகளில் ஆக்ஸ் ஃபார்ம் சேரிட்டி ஃசாப் என்ற அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.

சமீபத்தில் 35 வயதான ஜோ ஒரு பழைய புத்தக அருங்காட்சியகத்தில் தி சீக்ரட் கார்டன் என்ற பெயர் கொண்ட புத்தகத்தை பார்த்துள்ளார். அந்தப் பெயரைப் பார்த்தவுடன் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவிற்கு வரவே அதை திறந்து பார்த்தபோது அவரும் அவருடைய சகோதரி ஹேனாவும் சிறு வயதில் நன்கொடையாக கொடுத்த அதே புத்தகம் தான் அது என்பதை அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் இருந்த கையெழுத்து மூலம் கண்டுபிடித்தார்.

அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் ஜோ-விடம் கேட்டபோது இப்படி ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதில் என்னுடைய மற்றும் என் சகோதரியின் பல நினைவுகள் உள்ளது எனக்கூறி, 50 பவுண்டுகள் கொடுத்து அந்த புத்தகத்தை மீண்டும் வாங்கிவிட்டார். 50 பவுண்டுகள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் இருக்கும்.
தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
Read More

Friday 27 September 2019

இலங்கையை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்! Facts of Sri Lanka In Tamil

September 27, 2019 0

இலங்கை இந்தியா-விற்க்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு தீவு நாடு, இதை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றி தான் இதில் தொகுத்துள்ளோம்.

1. உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கை-யின் சீகிரியா யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2. இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. (பின்னவெலயில் உள்ளது).

3. இலங்கை அதன் வடிவத்தால் 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்றும் 'இந்தியாவின் கண்ணீர் துளி' என்றும் அழைக்கப்படுகிறது.

4. இலங்கையில் அதிகளவில் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது.

5. இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் 'சிறிய இங்கிலாந்து' (Little England) என்று அழைக்கப்படுகிறது.

6. உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

7. சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

8. இலங்கை தெற்காசியாவில் இரண்டாவது உயர்ந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. (மாலைத்தீவிற்கு அடுத்ததாக).

9. இங்கு ஹோட்டல் எனக்குறிப்பிடப்பட்ட அனைத்திலும் இரவில் தங்குவதற்கான வசதி காணப்படாது.

10. உலகின் பழமையான, மனிதனால் நடப்பட்ட மரத்தின் தாயகம் இலங்கையாகும். (ஸ்ரீ மகா போதி)

11. உலகின் நான்காவது பெரிய தேயிலை உற்பத்தியாளரும், (சீனா, இந்தியா மற்றும் கென்யாவுக்குப் பிறகு) மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளரும் இலங்கையே ஆகும்.

12. உலகின் மிகப்பெரிய நிலப் பாலூட்டியான யானையையும், மிகப்பெரிய கடல் பாலூட்டியான நீல திமிங்கலத்தை ஒரே நாளில் காணக்கூடிய ஒரே நாடு இலங்கை என்று கூறப்படுகிறது.

Read More